ரேஷன் கடைகளில் தக்காளி?! நாளை ஆலோசனை கூட்டம்!!

 
ரேஷன் தக்காளி

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தக்காளி விளைச்சல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி  வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக  தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சில்லறை  விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ. 90 முதல் ரூ. 110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த  திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

தக்காளி விலை உயர்வு

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ. 130 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தக்காளி

இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஜூலை 3ம் தேதி திங்கட்கிழமை  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆலோசனை கூட்டத்தில்  தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது, வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வது, ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web