அச்சச்சோ.... மீண்டும் தக்காளி விலை உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தக்காளி

தொடர் மழை மற்றும் விளைச்சல் குறைப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன் படி கடந்த 4 நாட்களாக தக்காளி கிலோவிற்கு ரூ110வரை விற்பனையாகி வருகிறது.  இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார் . இதனையடுத்து நேற்று கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்றே குறைந்து மொத்த விலையில்  கிலோ ரூ.60க்கு   விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.65 வரை விற்பனையானது.    

தக்காளி விலை உயர்வு

இந்நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வரத்து குறைவால், ஒரே நாளில் ரூ.60க்கு விற்ற தக்காளி, ரூ15 அதிகரித்து ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில் தக்காளி சில்லறை விற்பனை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web