மீண்டும் எகிறியது தக்காளி விலை... கிலோ ரூ.130க்கு விற்பனை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கடந்தசில நாட்களாக தக்காளி விலை சதமடித்துள்ளது. இந்த திடீர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலையேற்றத்தை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை விறபனை கடைகளை பொறுத்தவரை கிலோ ரூ100க்கு குறைந்து காய்கறிகளே இல்லை எனும் அளவு உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தவிலைக்கு ரூ. 90க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது மேலும் ரூ10 அதிகரித்து ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ. 130 முதல் ரூ. 140 வரை விற்கப்படுகிறது. தொடர் மழை ,விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது. இந்த திடீர் விலையேற்றம் அதனால் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!