குறைய தொடங்கியது தக்காளி விலை... கிலோ ரூ60க்கு விற்பனை! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
இந்த வாரத் தொடக்கம் முதலே தக்காளி விலை சதமடித்தது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் நல்ல விளைச்சல் கண்டதால் கிலோ ரூ10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக 2 நாட்களாகவே தக்காளி விலை சில்லறை கடைகளில் கிலோ ரூ120க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விலை கிலோ ரூ60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தைகள், சில்லறை விற்பனை கடைகளை பொறுத்தவரை ஒரு கிலோ தக்காளி ரூ100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!