மாணவர்களே தயாராகிக்கோங்க... நாளை பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்பப்பதிவு!

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் முடிவடைந்துள்ளது. தேர்வு முடிவடைந்ததும் மாணவர்கள் உயர்க்கல்விக்கு தயாராகி வருகின்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் இப்போதே உயர்க்கல்வி படிப்புக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் மாநில கல்வி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதியுள்ளனர்.
எந்த படிப்பை தேர்வு செய்வது, எந்த கல்லூரியில் படிப்பது என நீண்ட யோசனையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்பப்பதிவு மே 7ம் தேதி தொடங்கி ஜூன் 6 வரை நடைபெறும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது. மே முதல் வாரத்தில் பொறியியல் சேர்க்கை ஆன்லைன் பதிவு நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில் நாளை மறுநாள் தொடங்குகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!