நாளை கடைசி ஒரு நாள் போட்டி... சூர்யகுமாருக்கு கல்தா?! தொடரை வெல்லுமா இந்தியா?!

 
சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர்  இந்திய கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும் என்பதால் இரு அணிகளும் தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளன.

கிரிக்கெட் தீபக் சாஹர் சூர்யகுமார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும், சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டானார் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் வேகத்தில் இந்த தொடரில் இரண்டு முறையும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்கு மாற்றாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

T20 World Cup: Super 12 – இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள்  மோதல்

அவர் கூறியதாவது... மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இடது கை பந்துவீச்சாளரான ஸ்டார்க் போன்ற வீரரை எதிர்கொள்வது சவாலான காரியம்தான். அதில் சந்தேகம் இல்லை. அவர் ஸ்டம்பை அட்டாக் செய்ய பார்ப்பார். அது தெரிந்ததுதான். ஆனால், அதனை எதிர்கொள்ள சூர்யகுமார் தயார் நிலையில் வந்திருக்க வேண்டும். மூன்றாவது போட்டியில் சூர்ய குமாருக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அது நிச்சயம் தவறான முடிவாகாது. அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய திறனை வெளிப்படுத்தியுள்ளார் என வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web