நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்... என்னென்ன செய்யக்கூடாது? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை காலம், மே 4 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28 வரை நீடித்து வருகிறது. இந்த 25 நாட்கள் பொதுவாக கடுமையான வெப்ப நாள்களாகக் குறிக்கப்படுகின்றன.இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து கோடை வெப்பம் தீவிரமடைந்து வருகிறது.
மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை ஏற்கனவே 100 டிகிரியை தாண்டியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். குழந்தைகள், வயதானவர்கள், இணை நோய் இருப்பவர்கள் தகுந்த துணையுடன் அவசியத்திற்காக மட்டும் வெளியே வரலாம். நீர் மோர், பழரசம், காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!