இன்றிரவு பாமக சித்திரை முழுநிலவு... மதுக்கடைகளை மூட உத்தரவு!

 
டாஸ்மாக் மது பார்களில்  தின்பண்டங்கள்!! இன்று முதல் டெண்டர்!

இன்று இரவு மகாபலிபுரம் அருகே பாமக சார்பில், சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ள நிலையில், பாமகவினர் முழுநிலவு விழாவில் கலந்துக் கொள்ள தயாராகி வருகின்றனர். சுமார் 10 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வழியாக வருவோர் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீர்

புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மகாபலிபுரம் செல்ல வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க புதுச்சேரி கலால்துறை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி கலால்துறை இணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், புதுச்சேரியில் உள்ள சாராயம், கள், பார் உட்பட அனைத்து மது விற்பனைக்கூடங்களையும் இன்று மே 11ம் தேதி மதியம் 1 மணி முதல்  மூட உத்தரவிப்பட்டுள்ளது.

 பாமக

சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ககும் வகையில் இந்த தடுப்பு நவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அதில் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web