அதிர்ச்சி வீடியோ... தீவிரவாதிகள் சுட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் ஜிப்லைனில் சிரித்தப்படி செல்லும் சுற்றுலா பயணி!

 
தீவிரவாதிகள்

காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள்  சுட்டுக் கொன்றதில் 26 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருந்தாலும், மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, கீழே நடப்பது எது குறித்தும் எதுவும் தெரியாமல் சுற்றுலாப்பயணி ஒருவர் ஜாலியாக ஜிப்லைனில் சென்ற படியே செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

ஜம்மு

அந்த செல்ஃபி வீடியோவில் தீவிரவாதிகள் சுட்டதில் ஒருவர் குண்டடி பட்டு கீழே விழும் காட்சியும் பதிவாகியுள்ளது. தற்போது அந்த ஜிப்லைன் ஆப்பரேடருக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அவரிடம் இது  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web