இன்று முதல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்... வாகன ஓட்டிகளே உஷார்!
சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால் இன்று முதல் தாம்பரம் மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேடவாக்கம் கூட்டுசாலை சந்திப்பு- சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை இந்த மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாம்பாக்கம் சாலை, வேளச்சேரி சந்திப்பு வழியாக தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேடவாக்கம் கூட்டு சாலை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூா் சந்திப்பு வரை வேளச்சேரி பிரதான சாலை, செம்மொழி சாலை இவைகளில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்தப் பகுதியில் சோதனை முறையில் ஜூலை 2 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி பள்ளிக்கரணை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் யூ -டர்ன் அடித்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாம்பாக்கம் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பு யூ-டர்ன் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கம் சந்திப்பில் இருந்து மாம்பாக்கம் சாலை, வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!