சோகம்!! லிஃப்டில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பலி!!

 
lift

பெரிய ஷாப்பிங் மால்கள் தொடங்கி துணிக்கடை, பூஜை கடைகள் ஏன் ஃபேன்சி ஸ்டோர்களில் கூட வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், பொருட்களை மிக எளிதாக மேல் தளங்களில் ஸ்டோர் செய்யவும் லிப்டுகள் உபயோகமாகின்றன. சில நேரங்களில்  லிப்டுகளில் பயணிக்கும் போது மின்சாரம் நின்று விடுவதால் மனிதர்கள் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த சமயங்களில் அருகில் உள்ள தளங்களில் லிப்டுகள் நின்றுவிடும்.

 லிப்ட்
தலைநகர் டெல்லியில் 15 வயது சிறுவன் ஒருவன் லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பாவனா பகுதியில் அமைந்துள்ள  ஏர்கூலர் தொழிற்சாலையில் 2 வது மாடியில் சிறுவன் வேலை செய்து கொண்டிருந்தான்.

போலீஸ்

அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. தரைதளத்தில் இருந்து லிஃப்ட் திடீரென மேலே வந்ததால் சிறுவன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இந்த லிஃப்ட் கனரக பொருட்களை தரை தளத்திலிருந்து மேல் தளத்திற்கு எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web