இன்ஸ்டாவில் மனைவி புகைப்படத்தை பதிவிட்டதால் விபரீதம்.. இளைஞர் கைது !!

 
இன்ஸ்டா

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை தேரடி வீதியை சேர்ந்த தயாள பிரபு (39), சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் பார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். ஈரோட்டை ஆட்டோ டிரைவர் ரஞ்சித் என்பவர் இன்ஸ்டாகிராம் அதிகம்ப பயன்படுத்தி வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தயாளபிரபுவின் தொலைபேசி எண்ணையும், அவரது குரூப்பில் உள்ளவர்களின் எண்ணையும் எடுத்துள்ளார். 

தயாள பிரபு

மேலும் இன்ஸ்டாகிராமில் இருந்த தயாள பிரபு, அவரது மனைவி போட்டோவை எடுத்து, ஆபாச மார்பிங் செய்து மாற்றியுள்ளார். பின்னர் அந்த ஆபாச மார்பிங் புகைப்படத்தை குரூப்பில் வெளியிட்டு ரஞ்சித் மிரட்டல் விடுத்துள்ளார். இது போன்று தயாளபிரபுவின் 'இன்ஸ்டாகிராம்' நண்பர்களின் படங்களை எடுத்து அதே போன்று ஆபாச படங்களை வெளியிட்டு மிரட்டி வந்துள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட தயாளபிரபு ஒரு கட்டத்தில் புகார் அளிக்க முடிவுசெய்தார். அதன்படி, சிவகங்கை எஸ்.பி., செல்வராஜிடம் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி உள்ளிட்ட போலீசார், ஆபாச படங்களை வெளியிட்ட ரஞ்சித்தை கைது செய்தனர்.

தயாள பிரபு

அவர் வேறுயாரிடமும் இதுபோன்று செயல்பட்டு பணம்பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web