பெரும் அதிர்ச்சி... வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் உயிரிழப்பு!

 
கண்ணிவெடிகள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் மக்கள் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கிருந்து அமெரிக்க படைகள் திரும்பிய நிலையில், அரசுக்கு எதிரான போரில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்கள் தலைமையில் முழுமையான அரசு நடந்து வருகிறது. அந்நாட்டில் கொண்டுவரப்படும் பல புதிய கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

மேலும் போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில், வறுமை மற்றும் வேலையின்மையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022ஆம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.


கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்தனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோக துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இந்த சம்பவம் நடந்து உள்ளது, என தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்த விசாரணையில், வறுமை, வேலையின்மை ஆகியவற்றால் குழந்தைகள் மலை பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் கிடைக்க கூடிய குச்சிகள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை உணவுக்காக சேகரிக்கின்றனர். ஆனால், அதற்கு முந்தின ஆண்டுகளில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

மக்கள்

தற்போதைய வறுமை சூழலில் பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web