தமிழகத்தில் தொடரும் சோகம்.. கல்லூரி விழாவில் நடனமாடிய மாணவன் சுருண்டு விழுந்து மரணம்!

 
கோகுல்

தமிழகத்தில் கபடி விளையாட்டு வீரர், விளையாடிக் கொண்டிருந்த போதே சுருண்டு விழுந்து மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாணவர்கள் இப்படி வகுப்பறையில், ஆண்டு விழா மேடையில், விளையாட்டு மைதானங்களில் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்து வருகிறார்கள். காரைக்குடியில் அழகப்பா அரசு பாலிடெக்னி கல்லூரியின் ஆண்டு விழாவில், மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த மாணவன் கோகுல்(19), மேடையிலேயே மயங்கி, சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சக  மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் கோகுல். இவரது சொந்த ஊர் திருவாரூர். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். 

dead-body

இந்நிலையில், நேற்று முன் தினம் கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விளையாட்டுகளில் பங்கேற்ற மாணவர்களை மற்ற மாணவர்கள் மைதானத்தை சுற்றிலும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வந்தனர். 

கோகுலும் நண்பர்களோடு சேர்ந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக கல்லூரி நிர்வாகம் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Azhagappapuram PS

தகவலின் பேரில் விரைந்து வந்த அழகப்பாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவன் ஆண்டு விழாவில் நடனமாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web