திரையுலகில் தொடரும் சோகம்! பிரபல இயக்குநர் மாரடைப்பால் காலமானார்!
திரையுலகிற்கு போதாத காலம். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரை தொடர்ந்து மூத்த கலைஞர்கள் அடுத்தடுத்து திரையுலகில் திடீர் உயிரிழப்பு என தொடர்ந்து வருகிறது. இதனால் திரையுலகமே அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளது. அந்த வரிசையில் பெங்களூரு-கன்னட திரையுலகின், பிரபல இயக்குனர் கிரண் கோவி, மாரடைப்பால் நேற்று மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் காலமானார்.
Oh such a sad news to know that Kannada film Director Kiran Govi is no more 😌 My brief interaction with him during the making of 'Payana' and our conversations at few social gatherings have always been very interesting. He loved Kishore Kumar songs 😊 Om Shanti 🙏 #kirangovi pic.twitter.com/AubnqYy5KF
— Nitesh Nittur (@niteshshekar) March 26, 2023
இவருக்கு வயது 43. இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், நடிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள். பயணா, யாரிகே யாருன்டு, பாரு வைப் ஆப் தேவதாஸ் உட்பட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.நேற்று பிற்பகல் தன் அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது கிரண் கோவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!