திமுக கிளைச் செயலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை !! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
நந்தினி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் உள்ள திருபுவனம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்பிரமணியன் (44). இவர் திருவோணம் பேரூர் திமுக கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். பாலாவுக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 

நந்தினி

பாலா அப்பகுதியில் பட்டு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தொழிலும், வாழ்க்கையும், அரசியலும் சிறப்பாக சென்றுக்கொண்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காலகட்டத்துக்கு பின் தொழிலும், ஏலச் சீட்டு நடத்தியதில் நஷ்டமும் ஏற்பட்டது. இதனால் அவர் பலரிடம் கடன்பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்படுகிறது.

நந்தினி

இந்நிலையில், மனவேதனையில் இருந்த பாலா நேற்று இரவு, திருநாகேஸ்வரம் ரயில்வே கேட் அருகில் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web