பீகாரில் பெரும் சோகம்... 3 மகள்களை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை!

 
bihar

மனைவி இறந்த துக்கத்தில் இருந்து வந்தவர், மனைவியின் பிரிவைத் தாக்கிக் கொள்ள முடியாமல் தனது 3 மகள்களையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மிஸ்ரௌலியா கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம் மிஸ்ரௌலியா கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் ராம் (40). கட்நத ஒரு வருடத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்த நிலையில், அமர்நாத் ராம் தனது 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மனைவியை இழந்த சோகத்தில் இருந்து வந்த அமர்நாத், குழந்தைகளுக்கு முட்டைகளைச் சமைத்துக் கொடுத்த பின்னர், தனது மனைவியின் சேலைகளை கயிறுகளாகப் பயன்படுத்தி, மூன்று மகள்களையும் தன்னையும் பெட்டியின் மீது ஏறி நின்று, குழந்தைகளை குதிக்க சொல்லி தற்கொலைக்கு  முயன்றுள்ளனர். இந்தில் அதிர்ஷ்டவசமாக, இரண்டு மகன்கள் குதிக்காமல் பெட்டி மீதே நின்றுக் கொண்டிருந்ததால் உயிர் பிழைத்தனர்.

ஆம்புலன்ஸ்

இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், மனைவியின் மறைவு, தனியார் நிதி நிறுவன கடன் அழுத்தம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பின் சிரமம் காரணமாக அமர்நாத் ராம் இந்த கொடூர முடிவை எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!