அதிர்ச்சி!! போலீஸ் பூட்ஸ் காலில் மிதிபட்டு பச்சிளம் குழந்தை பலி..!!

 
ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் உள்ள தியோரி பகுதியை சேர்ந்த பூஷண் பாண்டே அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார்.  இவர் மீது பினையில் வர முடியாதா கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் வீட்டில் இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர்.

அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். போலீஸ் வந்ததை பார்த்து பாண்டேவும் அவரது மனைவியும் பயத்தில் பின்புறமாக தப்பி ஓடியுள்ளனர். போலீசார் வீட்டை வேகமாக தீவிரத்துடன் சோதனை செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட்

அப்போது பிறந்து 4 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளது. இந்த குழந்தை போலீசார் ரெய்டின்போது அவர்கள் பூட்ஸ் காலில் மிதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதைத் தொடர்ந்து பூஷண் பாண்டேவை கைது செய்யாமல் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தனது குழந்தை இறந்த விவகாரத்தை வீடியோ பதிவாக பாண்டே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பூதாகரமாக வெடித்தது. போலீசாரின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. விவகாரத்தில் தலையிட்டுள்ள முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட்

இதைத் தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய 6 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. போலீஸ் ரெய்டின் போது பச்சிளங்குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web