ஏரியில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி!! சுற்றுலா சென்ற போது சோகம்!!

 
விஷ்ணு

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தோடேரு பகுதியை சேர்ந்த விஷ்ணு, கிரண், மகேந்திரா, மகேஷ், பாலாஜி, கல்யாண், ரகு பிரசாந்த், ஸ்ரீகாந்த், சுரேந்திரா ஆகிய 10 இளைஞர்கள், நேற்று  ரத்தனகிரி ஏரிக்கு சென்றனர். ஏரியில் அவர்கள் படகு சவாரி செய்தனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்ததால் அனைவரும் நீரில் தத்தளித்தனர். இதில் 4 இளைஞர்கள் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர். 

இந்நிலையில், மற்ற 6 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட கரையில் இருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

விஷ்ணு

ஆனால் அப்பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.  

இதையடுத்து கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திலிருந்து படகு கொண்டு வரப்பட்டு 8 நீச்சல் வீரர்கள் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது. இதில், கல்யாண், ஸ்ரீகாந்த் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்ற நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விஷ்ணு

இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web