புத்தாண்டு தினத்தில் சோகம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலியான பரிதாபம்!

 
மேற்கூரை இடிந்து விபத்து

புது வருஷத்தில் பெரும் சோகமாக, திருச்சி மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிக் கிடக்கும் உடல்.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநராக வேலைப் பார்த்து வரும் மாரிமுத்து, தனது உறவினரின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அரியமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் மாரிமுத்துவின் மனைவி விஜயலட்சுமி, தாய் சாந்தி மற்றும் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் தூங்க சென்ற நிலையில், வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.

வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை

இடிபாடுகளில் சிக்கி நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புத்தாண்டில் நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web