விபரீதம்....மனைவிக்கு பயிற்சியளித்த போது டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி பலியான சோகம்!

 
கீதா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பச்சுடையாம்பாளையம் பகுதியில் விவசாயி சிவக்குமார் (53) - கீதா (39) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரதீவ் என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த தம்பதிக்கு விவசாய நிலம் உள்ளது. அங்கு விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர். 

கீதா

இந்த நிலையில், தோட்டத்துக்கு சென்ற சிவக்குமார் தனது விவசாய தோட்டத்தில் உழுததாக கூறப்படுகிறது. சிவக்குமார் டிராக்டரை ஓட்டிச்செல்ல மனைவி கீதா அவருடன் அருகே உட்கார்ந்து சென்றார். சிறிது நேரத்துக்கு பிறகு தனது மனைவி கீதாவுக்கு கணவர் சிவக்குமார் டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார். .  

அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் கணவன், மனைவி இருவரும் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சிவக்குமார், கீதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கீதா

இதனைப் பார்த்த அருகில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே சமயத்தில் கணவனும், மனைவியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!


 

From around the web