அதிர்ச்சி... தண்டவாளத்தில் தூங்கியவர் மீது ரயில் மோதல்!

தென் அமெரிக்க நாட்டில் பெரு தலைநகர் லிமாவில் இருந்து பெருவியன் ஆண்டிஸ் நகருக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஏட் நகர் அருகே ரயில் சென்றபோது இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை கண்டதும் ரயிலின் வேகத்தை டிரைவர் குறைத்துள்ளார்.
எனினும் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது ரயில் மோதியது. இதில் சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ஜுவான் கார்லோஸ் டெல்லோ என்பதும், போதை தலைக்கேறி தண்டவாளத்தில் படுத்து கிடந்ததும் தெரிய வந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!