பாதி வழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்... தண்டவாளத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் திடீர் மண்சரிவு!

அரியலூர் மாவட்டத்திற்கு அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் - அரியலூர் வழித்தடத்தில் செல்லும் பயணிகள் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இன்று காலை லேசான மண்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விழுப்புரத்திலிருந்து அரியலூர் வழியாக திருச்சிக்கு செல்லவிருந்தது பயணிகள் ரயில், வெள்ளூர் ரயில் நிலையத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் செந்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்சரிவு ஏற்பட்ட இடம் சமன் செய்யப்பட்டது. இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வெள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலும், செந்துறை ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் குறைவான வேகத்தில் ரயில் பாதையில் இயக்கப்பட்டது. தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புடன் சுரங்கப்பாதை அமைக்கப் பணியும் நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!