விஜயகாந்துக்கு அஞ்சலி... இன்று வணிகர்கள் கடையடைப்பு!

 
கடையடைப்பு விஜயகாந்த்

தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போஸ்டர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக நேற்று காலை காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடல் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த்

இந்த நிலையில், மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதே போல் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வியாபாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web