மகாராஷ்டிராவில் பரபரப்பு... துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கொலை மிரட்டல் வந்திருப்பதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இந்த மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொலை மிரட்டல் அழைப்புக்கள் கோரேகான மற்றும் ஜேஜே மார்க் காவல் நிலையங்களுக்கும், தலைமையிடமான மந்தராலயாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!