இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்… மோடி வரவேற்பு!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியாகியுள்ள நிலையில், இது இரு நாடுகளுக்கும் முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் இந்த ஒப்பந்தம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டிய தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ முயற்சியை வலுப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் மேலும் விரிவுபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் வளர்ச்சி பாதையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
