தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி... மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் கடைப்பிடிப்போம்!

இன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தவெக சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார்.
Thalapathy Vijay takes part in prayer alongside with his Islamic brothers 🤍 #Iftar #TVKVijay @TVKVijayHQ pic.twitter.com/0dhIRVBlzY
— Vijay Fans Trends (@VijayFansTrends) March 7, 2025
நிகழ்ச்சிக்காக மட்டுமின்றி உண்மையிலேயே இன்றைக்கு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 3000 பேர் பங்கேற்று இருந்தனர். ஆம், காலை முதல் உணவருந்தாமல் இருந்த அவர், நோன்புக் கஞ்சி, பேரீச்சம்பழம், சமோசா சாப்பிட்டு நோன்பு திறந்தார்.
இதனையடுத்து, நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்குப் பின் தவெக சார்பில் மட்டன் பிரியாணி சிக்கன் 65 ஆகியவை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நோன்பு துறந்ததற்கு பிறகு, இஸ்லாமியர்களுடன் முன்வரிசையில் நின்று தொழுகையில் ஈடுபட்டார்.
Thalapathy Vijay speech 🙏🏼
— Vijay Fans Trends (@VijayFansTrends) March 7, 2025
He expressed his gratitude to everyone who gathered for the #Iftar celebration 🌙 #TVKVijay @TVKVijayHQ @actorvijay pic.twitter.com/S8BhGf4pip
இது குறித்து பேசிய தலைவர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும்… எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி, மனிதநேயத்துக்கும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடித்து வரும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது அழைப்பை ஏற்று வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.
இறுதியில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முடிந்து பின் புறப்பட்ட விஜய், திறந்த பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி நின்று ரசிகர்களுக்கு கை அசைத்து வீட்டிற்கு கிளம்பினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!