உதயநிதியின் 40 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் விழுந்து விபத்து

திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை வரவேற்பதற்காக திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் பகுதியில் உள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் திமுக கொடிகளும் பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டது. அதுபோல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் எதிரே சுமார் 40 அடி உயரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் திருவள்ளூரில் திடீரென்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைத்திருந்த முதல்வர் துணை முதல்வர் கட் அவுட் விழுந்தது. அவ்வழியாக சென்ற ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.இதனால் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட மற்ற பயணிகள் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே போன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்தார் . இந்த கட்அவுட் மின்சார கம்பி மீது விழுந்து அருந்து விட்டதால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கட் அவுட்டுகளை அப்புறப்படுத்தி மின்சார கம்பிகளை சரி செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!