அட... இன்றும் இந்தியாவில் பிரிட்டிசுக்கு கீழே செயல்பட்டு வரும் ரயில் நிலையம் !

 
சகுந்தலா ரயில்வே

இந்தியாவில் பெரும்பாலான மக்களின் பயணிகளின் பயண தேவைகளின் காவலனாக ரயில்கள் தான் இருந்து வருகின்றன.  குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான்.  1850களில் பம்பாய் முதல் தானே வரை முதல் இருப்பு பாதை போடப்பட்டது. இதனை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முக்கிய வழித்தடங்களுக்கான  ரயில் சேவையை ஆங்கிலேயர்கள் போட்டிருந்தனர். இருந்தாலும் சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.  

சகுந்தலா ரயில்வே

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து நவீன ரயில் சேவைகளை இந்தியா மேம்படுத்தி வருகிறது.  அந்த வகையில் அதிவேக ரயில், வந்தே பாரத், புல்லட் ரயில் சேவைகளுக்கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் பாதை மட்டும் இன்றும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.  அந்த பாதைக்காக இன்றும் இந்திய அரசு பிரிட்டிஷாருக்கு பணம் செலுத்தி வருகிறது. அதன்படி மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள யவத்மாலுக்கும் மூர்த்திஜாபூருக்கும் இடையில் 190 கிமீ நீளமுள்ள சகுந்தலா ரயில்வே என்ற குறுகிய ரயில் பாதை அமைந்துள்ளது.

சகுந்தலா ரயில்வே

1910ல், கில்லிக்-நிக்சன் என்ற தனியார் பிரிட்டிஷ் நிறுவனம் தான் இந்த சகுந்தலா ரயில்வே பாதையை நிறுவியது.ஆங்கிலேயர் ஆட்சியின்போது மத்திய இந்தியா முழுவதும் இயங்கிய கிரேட் இந்தியன் பெனிசுலர் ரயில்வே நிறுவனம் இந்தப் பாதையில் ரயில்களை இயக்கியது. அதன் பின்னர், 1952ல் ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகு  ரயில்வே தேசிய மயமாக்கப்பட்டபோது இந்தப் பாதையை மட்டும் அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கவில்லை. 19ம் நூற்றாண்டில் தண்டவாளங்களை நிறுவிய நிறுவனம் தான் இன்னும் இந்த ரயில் பாதையைப் பராமரித்து வருகிறது. மேலும் இங்கு ரயில்களை இயக்குவதற்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தியா இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?