ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 12 சுரங்க தொழிலாளர்கள் பலி!
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ட்னிப்ரோபெட்ரோவ்ஸ் பகுதியில் பணியாற்றி திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஏற்றிய வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் வாகனம் முழுவதும் சேதமடைந்தது. சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷ்யா–உக்ரைன் போர் தொடரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
