அதிர்ச்சி ... மத்திய அமைச்சர் ரயிலில் இருந்து மாயமானார்... பெரும் பரபரப்பு!

மத்திய அமைச்சர் ஜுவல் ஓரான் டெல்லியிலிருந்து ஜபல்பூருக்கு கோண்ட்வானா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர் ஜபல்பூரை அடைவதற்குள் மர்மமான முறையில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் சனிக்கிழமை இரவு ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட கோண்ட்வானா எக்ஸ்பிரஸில் அவர் கடைசியாக தனது கேபினில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் காலையில் அவர் தனது பெர்த்தில் இல்லை, எனவே ரயில்வே மற்றும் காவல்துறைக்கு உடனடியாக இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே உடனடியாக தேடுதல் பணியைத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரத் தொடர் தேடலுக்கு பிறகு அவர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸில் 162 கி.மீ தொலைவில் உள்ள சிஹோரா நிலையத்தில் (ஜபல்பூர்) கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு கை, கால்களில் காயங்கள் இருந்தன. பின்னர், அவரை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் அதிகாலை 3:45 மணிக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள டாமோ ரயில் நிலையத்தை அடைந்தபோது, அமைச்சர் ஜுவல் ஓரான் நிலையத்தில் இறங்கினார். ஆனால் இந்த நேரத்தில் அவரது சர்க்கரை அளவு குறைந்திருந்ததாகத் தெரிகிறது. மீண்டும் அவர் ரயிலில் ஏறுவதற்கு முன்பே, அவரது கால் வழுக்கி விழுந்து சிறிது காயமடைந்தார்.
கோண்ட்வானா ரயில் ஜபல்பூருக்குப் புறப்பட்டது. இந்த நேரத்தில், அமைச்சர் டாமோ ரயில் நிலையத்தில் காத்திருந்து, பின்னால் வந்த எம்பி சம்பர்க் கிராந்தி ரயிலில் ஏறி ஜபல்பூரை அடைந்தார். ஆனால் அமைச்சர் கோண்ட்வானா எக்ஸ்பிரஸில் இல்லாததால், அவரது ஊழியர்கள் அவரைத் தேடத் தொடங்கினர், டெல்லியிலிருந்து ஜபல்பூர் வரை பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விஷயத்தில் தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால் அமைச்சர் ஜபல்பூரை அடைந்த பிறகு சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. அமைச்சரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. மூத்த ரயில்வே அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து இந்த செய்தி கிடைத்தவுடன் ரயில்வே உஷார்படுத்தப்பட்டது. ஜபல்பூரை அடைந்ததும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இன்று அவர் ஜபல்பூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.
மோடி அரசவையில் மத்திய அமைச்சர் ஜுவல் ஓரான் பாஜகவின் மூத்த தலைவராக அறியப்படும் இவர் 2024 இல் ஒடிசாவின் சுந்தர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி அரசாங்கத்தில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணையமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!