ஓயாத தொல்லை... குரங்குகளை கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர்!

 
குரங்கு


 
திண்டுக்கல் மாவட்டத்தில்  தவசிமடை வீரசின்னம்பட்டியில் வசித்து வருபவர்  ராஜாராம் . 33 வயதான  இவரது தோட்டத்தில் குரங்குகள் தொல்லை இருந்து கொண்டே இருந்தது. இதனால் கடும் அவதிப்பட்டார்.   அதைக் கட்டுப்படுத்த வடுகம்பட்டியைச் சேர்ந்த ஜெயமணி (31) என்பவருடன் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கியால் குரங்குளை சுட்டு வேட்டையாடிவிட்டார். அதன் பிறகு சுட்டு வீழ்த்திய 2 குரங்குகளை சமைத்தும் சாப்பிட்டுள்ளனர்.

திண்டுக்கல்
இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுவிசாரணை நடத்தினர்.  அங்கு நடத்திய சோதனையில், 2 குரங்குகளை வேட்டையாடி, அதன் தோல்களை தோட்டத்தில் புதைத்து வைத்திருந்து தெரியவந்தது.

கைது

இதையடுத்து, ராஜாராம், ஜெயமணி ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. அத்துடன் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் குரங்கு தோல்களை பறிமுதல் செய்தனர்.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web