இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபா்... பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

இன்று ஏப்ரல் 21ம் தேதி, 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ். அவருடன் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் 3 குழந்தைகளும் வரவுள்ளனா்.
டெல்லியில் இன்று மாலை பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கும் ஜே.டி.வான்ஸ், இருதரப்பு வா்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இதனைத் தொடா்ந்து, ஜே.டி.வான்ஸ் மற்றும் உஷா ஆகியோருக்கு பிரதமா் இரவு விருந்து அளிக்கவுள்ளாா்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை மேற்கொண்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பின்னா் அதை நிறுத்தி வைத்தாா். வரி விதிப்பு, சந்தை அணுகல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், துணை அதிபா் ஜே.டி.வான்ஸின் முதல் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லி பாலம் விமானப் படை தளத்தில் இன்று காலை 10 மணியளவில் வந்திறங்கும் ஜே.டி.வான்ஸை மூத்த அமைச்சா் ஒருவா் வரவேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 'ஜே.டி.வான்ஸுடன் அவரது குடும்பத்தினா் மட்டுமன்றி அமெரிக்கா பாதுகாப்பு - வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளும் வரவுள்ளனா். பின்னா், ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி நாராயண் அக்ஷா்தாம் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளாா். பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்கள் விற்பனை வணிக வளாகத்துக்கும் அவா்கள் செல்லவிருக்கின்றனா்.
இன்று மாலையில் நடைபெறும் பிரதமா் மோடி - துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இடையிலான பேச்சுவாா்த்தையில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். பிரதமா் மோடி தலைமையிலான இந்திய குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோா் பங்கேற்பா்.
இன்று இரவு டெல்லியில் இருந்து ஜெய்பூருக்கு புறப்பட்டுச் செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினா், அங்கு அம்பா் கோட்டை உட்பட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நாளை பாா்வையிட உள்ளனா்.
ஜெய்பூா், ஆக்ராவுக்கு...: ஜெய்பூரில் ராஜஸ்தான் சா்வதேச மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஜே.டி.வான்ஸ் பங்கேற்கவுள்ளாா். அப்போது, அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்தின்கீழ் இந்திய-அமெரிக்க உறவுகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து அவா் விரிவாக உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதே போன்று அடுத்த நாள் ஏப்ரல் 23ம் தேதி புதன்கிழமை காலையில் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவுக்கு செல்லும் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா், தாஜ்மஹால் மற்றும் 'சில்பகிராமம்' எனும் கலைப் பொருட்கள் கண்காட்சி-விற்பனையகத்தைப் பாா்வையிட உள்ளனா். மீண்டும் ஜெய்பூருக்கு திரும்பும் அவா்கள் ஏப்ரல் 24ம் தேதி வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வா் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!