வைகுண்ட ஏகாதசி சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

 
19 வருஷ அதிசயம்!! இன்று வைகுண்ட ஏகாதசி உற்சவம்!  திருச்சி முழுவதுமே திருவிழா தான்!! ஸ்ரீரங்கம் கோயில் அட்டவணை!!

தமிழ் மாதங்களில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமியை அடுத்த 11வது நாள் ஏகாதசி திதி அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக ஏகாதசி திதி சிறப்பானவை என்றாலும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி தினத்தை வைகுண்ட ஏகாதசி என்கிறோம். இந்த தினத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து வைகுண்ட வாசல்வழியாக வரும் திருமாலை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கப்பெறுவதாக ஐதீகம்.அந்த வகையில் நடப்பாண்டில் சொர்க்கவாசல் திறப்பு விஷ்ணு ஆலயங்களில்  டிசம்பர்  23ம் தேதி சனிக்கிழமை  அதிகாலையில் நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் திருச்சி ரங்கநாதர்

தாய்க்கு நிகரான தெய்வம் இல்லை. காயத்ரி மந்திரத்துக்கு ஈடான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கும் ஈடான விரதமும் இல்லை என்கிறது நமது புராணங்கள். அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் ஏகாதசி விரதம் என்கிறது புராணங்கள்.மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்வார்கள்.  அனைத்து ஏகாதசியிலும் விரதமிருந்து பெறும் பலனை இந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் இருந்தாலே கிடைத்துவிடுகிறது என்கிறது விஷ்ணுபுராணம்

விஷ்ணு காக்கும் கடவுள் அவருடைய காதுகளில் இருந்து வெளிவந்த அசுரர்களாகிய  மது , கைடபர்  இருவரும் தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினர். பகவானிடம் முறையிட அவர்களுடன் போரிட தொடங்கினார். இருவரும் விஷ்ணுவின் பாதத்தில் சரணடைந்தனர். “பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால்  எங்களுக்கு கருணை காட்ட வேண்டும்.” என வேண்டினர்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா! டிசம்பர் 14 திருச்சியில் உள்ளூர் விடுமுறை!!

அத்துடன் “எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் வடக்கு வாசல் வழியாக,  வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை போக்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்” எனகேட்டுக் கொண்டனர் .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . இந்நாளில்  “ஓம் நமோ நாராயணாய” என வாயால்  உச்சரித்து, மனதால் பிரார்த்தனை செய்து  பாவங்கள் நீங்கப் பெற்று, ஸ்ரீமகாலஷ்மியின் பேரருளை பெறுவோம்.வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபட்டு, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்,  இம்மையிலும், மறுமையிலும் அவன் பேரருளை பெறலாம்.
ஓம் நமோ நாராயணாய..!!
ஓம் நமோ நாராயணாய..!!
ஓம் நமோ நாராயணாய..!!

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web