வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் படுகாயம்....!
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சாமிதரிசனம் செய்துவிட்டு வேனில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மதுரை ஒத்தக்கடை சந்திப்பு அருகே இந்த வேன் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது எதிரில் திருச்சியில் இருந்து வந்த லாரியுடன் நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் 5 படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!