பணம் படைத்தவர்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் 3 மொழியில் படிக்கிறார்கள்.... வானதி சீனிவாசன் வாதம்!

PM SHRI திட்டத்திற்கு முன்னதாக மாநில அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், அதனை அமல்படுத்தாததால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை, மத்திய அரசின் திட்டங்கள் அமல்படுத்தாதபோது அந்த திட்டத்தின் நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது வாடிக்கை.தற்போது மாநில அரசு ஒப்புக்கொண்ட திட்டத்தை அமல்படுத்தவில்லை. திமுக மொழி ரீதியாக, பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் கட்சி. திமுகவின் கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பாருங்கள் திமுக பிரிவினைவாத கட்சி அல்லாமல் வேறென்ன? அவர்களின் பாரம்பரியம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ்நாட்டை இந்தியாவுடன் சேர விடாமல் தடுக்கும் போராட்டம் நடத்துவதுதான். தற்போது ஹிந்தி மொழியை திணிப்பதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலுமே இரு மொழிக் கொள்கை மட்டுமே உள்ளது என கூற முடியுமா? பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்று மொழியில் கற்க வேண்டுமா? சமூக நீதிக்கு அநீதி இழைக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகளை ஏன் தடுக்கிறீர்கள்? சங்கிகள் மட்டுமே திருப்பரங்குன்றம் பிரச்சினையை செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டுகிறார். திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்று சொல்வதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒப்புக்கொள்கிறாரா? அதற்கு அமைச்சர் பதிலளித்த பிறகு சங்கி வருகிறார்களா, மங்கி வருகிறார்களா என பார்க்கலாம் என தெரிவித்தார். நீட் நுழைவு தேர்வு மட்டுமல்லாது அனைத்து வகையான தேர்வுகளிலும் மதிப்பெண் கட் ஆப் தற்போது அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!