கணவருடன் ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்தில் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்!

 
வரலட்சுமி சரத்குமார்


 
நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன்  'போடா போடி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், இவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தாலும், வசூல் ரீதியாக இந்த படம் தோல்வியை தழுவியது . இதனால்  வரலட்சுமி சரத்குமாருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வரலட்சுமி

ஹீரோயினாக தற்போது வரை திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், குணச்சித்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரள வைத்தார்.கிட்ட தட்ட லேடி விஜய் சேதுபதி போல் வெரைட்டியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில், கடைசியாக வெளியான மதகஜராஜா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

வரலட்சுமி
2024ல்   தன்னுடைய காதலர், மற்றும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை  திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சிங்கிளாக பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமி இந்த ஆண்டு கணவருடன் சேர்ந்து தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 
இதன் ஒரு பகுதியாக, வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய அம்மா மற்றும் கணவருடன் ஆதரவற்ற குழந்தைகள்  ஆசிரமத்திற்கு வருகை தந்து  அவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வரலட்சுமி சரத்குமாருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web