வெள்ளியங்கிரி மலைக்கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!
Jan 31, 2026, 18:29 IST
வெள்ளியங்கிரி மலைக்கோயிலில் நாளை முதல் பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி மலைப்பாதையில் உள்ள படிக்கட்டுகளுக்கு சாதுக்கள் பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி காலத்தில் வெள்ளியங்கிரி மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்கள் பாதுகாப்பாக மலை ஏற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து, உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மலை ஏற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
