சென்னையில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் மாரடைப்பால் காலமானார்... திரையுலகினர் நேரில் அஞ்சலி!
பிரபல மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70. 1985ல் வெளியான ‘ஜானகீய கோதாதி’ மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமான வெங்கடேஷ அதன் பின்னர் பல படங்களுக்கு இசையையும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார்.

வெங்கடேஷ் 80-90களின் ஹிட் படங்களில் இசை அமைத்தவர். மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வெற்றி பெற்றுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.

1993-ல் கேரள மாநிலம் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றுள்ளார். அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் தமிழ் சினிமா உள்பட பலரும் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவரது இசை இன்னும் நீண்ட காலம் நினைவில் இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
