இன்று குடியரசு துணைத் தலைவா் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

இன்று காலை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருகிறாா்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு, 3 நாட்கள் பயணமாக வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற துணைவேந்தா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இதையடுத்து, இரண்டாவது நாளான நேற்று முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று யானைகளைப் பாா்வையிட்டு, உணவளித்து மகிழ்ந்தாா். அதன் பின்னர் உதகை ஆளுநா் மாளிகையில் இருந்து இன்று ஹெலிகாப்டா் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வரும் ஜகதீப் தன்கா், அங்கிருந்து காா் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா்.
இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள், வேளாண் தொழில்முனைவோருடன் கலந்துரையாடுகிறாா். இதையடுத்து, விமான நிலையத்துக்குச் செல்லும் அவா் அங்கிருந்து விமானப் படை விமானம் மூலம் புதுதில்லி புறப்படுகிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி விமான நிலையம் சென்று குடியரசு துணைத் தலைவரை வழியனுப்புகிறாா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!