புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு ... தமிழக தொண்டர்களுக்கு அனுமதி இல்லை
நாளை (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு புதுச்சேரி உப்பளத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் “புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தவெகவின் முதல் பொதுக்கூட்டம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 5,000 பேர் மட்டுமே QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு மூலம் அனுமதிக்கப்படுவர். தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்று தலைமை தெளிவாக தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. தலைவரின் பாதுகாப்பையும் நிகழ்ச்சியின் ஒழுங்கையும் முன்னிட்டு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தலைவரைப் பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, பிளக்ஸ், பேனர்கள் வைப்பது, சிலைகள் அருகே செல்வது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் காவல்துறை அனுமதித்த பகுதிகளில் மட்டுமே நிறுத்த வேண்டும், நிகழ்ச்சி முடிந்தவுடன் அமைதியாக வெளியேற வேண்டும். கழக நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும்.

தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பும், நிகழ்ச்சியின் வெற்றியும் அனைவரது பொறுப்பாகும் என குறிப்பிடப்பட்டு, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
