ஆட்சியாளர்களின் அலட்சியமே மழை நீர் தேங்க காரணம்... விஜய் கடும் விமர்சனம்!

 
விஜய்

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இது குறித்து தவெக  தலைவர் நடிகர் விஜய் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  “தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.  வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம்.  


மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. “பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்”.  
அதேநேரம், மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என தவெக கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  தவெக தொண்டர்கள் ஏற்கனவே பல பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்  எனவும் கூறியுள்ளார்.  


நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை “மக்கள் மீது சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால், கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. இது ஆட்சியாளர்களின் அலட்சியத்தையே காட்டுகிறது” எனக்  குறிப்பிட்டார். மீதமுள்ள பருவமழைக் காலத்திற்குள் குறைந்தபட்சம் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், மழைநீர் விரைவாக வெளியேறும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!