பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல் விஜயகாந்த்... நிர்மலா சீதாராமன் இரங்கல்... !
தமிழகத்தின் முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவர் நடிகர் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். நடிப்பிலும் தனிமுத்திரை பதித்து, நடிகர் சங்கத்திலும் ஆளுமையுடன் செயலாற்றிய விஜயகாந்த், அரசியலிலும் கால்பதித்து, அரசியல் பயணத்திலும் தனக்கென தனிப்பாணியை உருவாக்கி மக்கள் மனங்களை வென்றுள்ளார்.
Captain Vijaykanth is no more. Condolences. Was known as ‘man with a golden heart.’
— Nirmala Sitharaman (@nsitharaman) December 28, 2023
மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம்.
அவரை இழந்துவாடும்,…
மிகக் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். எளிய மக்களுக்கு அன்பின் உருவமாக, கருணையின் வடிவமாக இருந்த விஜயகாந்த் மரணம் தேமுதிகவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். “Captain Vijaykanth is no more. Condolences. Was known as ‘man with a golden heart.’ மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!