விஜய் கட்சி தொண்டர்கள் திடீர் சாலை மறியல்... தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து அக்கட்சியின் பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் தவெகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த மாநகராட்சி அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "காவல்துறை அனுமதியுடன் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டதாகவும், தவெக வளர்ச்சியை பொறுக்காமல் ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் நீர் மோர் பந்தலை அகற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!