ராமநவமி ஊர்வலத்தில் வெடிகுண்டு வீச்சு.. பயங்கர கலவரம்.. 144 தடை உத்தரவு!
வடமாநிலங்களில் ராமநவமி பண்டிகையொட்டி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ராமநவமி ஊர்வலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
இந்நிலையில் பீகாரில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்ந்து, மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதில் வெடிகுண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பீகாரின் சசரம் பகுதியில் இன்று(ஏப்.02) வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கல் வீச்சு போன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ராமநவமி பண்டிகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து ஷரீஃப், நாலந்தா நகரில் பல்வேறு நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல் வீச்சு போன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தணிந்த நிலையில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!