திருப்பதியில் பிதுங்கி வழியும் கூட்டம்... ஜூலை 15 வரை விஐபி தரிசனம் ரத்து!

 
திருப்பதி


 இந்தியா முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் ஆன்மிக தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுலை 15  வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி


கோடை விடுமுறை, தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் அட்மிஷனுக்கு நுழைவு தேர்வுகள் நடக்க உள்ள நிலையில்  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மிக மிக அதிகமாக இருப்பதால் 20  முதல் 25 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்ய நிலை உருவாகியுள்ளது.  இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு விரைவில் சாமி தரிசனம் செய்து வைக்கும் ஏற்கனவே ஜுலை 15  வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!


பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைக் தவிர்க்க திருப்பதியில் தினமும் இரவு 8 மணிக்கு  வழங்கப்படுக் சர்வ தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்று அதில் உள்ள நேரத்திற்கு வரலாம். நேரடியாக இலவச தரிசனத்தில் வரும்  பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன்  ஒத்துழைத்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  திருமலையில் 40,000  பக்தர்களுக்கான அறைகள் மட்டுமே உள்ளது. எனவே கூட்டம் அதிகமாக உள்ளதால் அனைத்து பக்தர்களும் திருமலையில் அறைகள் பெற முயற்சி மேற்கொள்ளமால் திருப்பதியில் தங்கி வர வேண்டும் என  தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web