வைரல் வீடியோ... சினிமா பாணியில் பாடலைக் கேட்டதும் திருமணத்தை நிறுத்திய மணமகன் !

 
திருமண


 
இந்தியாவை பொறுத்தவரை திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது தான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்க முடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைத்து வருகின்றனர்.  திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், எதிர்பாராத தருணங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்ற பாடலின் முடிவில் மணக்கோலத்தில் இருக்கும் நடிகை சிம்ரன் தனது காதலன் பிரசாந்திடமே செல்வார். அதேபோன்று சமூக வலைதளங்களில்  வைரலான பதிவின்படி, டெல்லியில் நடந்த ஒரு திருமணத்தின் போது டிஜே ‘சன்னா மெரேயா’ பாடலை வாசித்தார்.
இந்த பாடலைக் கேட்டதும், மணமகன் தனது முன்னாள் காதலியை நினைத்து ஏக்கம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டார். இதையடுத்து அவர் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.  ‘சன்னா மெரேயா’ என்பது சூப்பர்ஹிட் பாலிவுட் படமான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ லிருந்து  பரவலாக விரும்பப்படும் பாடல் ஆகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web