வைரல் வீடியோ... பேருந்தை நிறுத்திவிட்டு சாலையோரத்தில் தொழுகை செய்யத் தொடங்கிய ஓட்டுனர்... பயணிகள் கடும் அவதி!
இந்நிலையில் அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுனர் தொழுகை செய்த காட்சிகளை வீடியோவாக பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தி, ஒரு இருக்கையில் அமர்ந்து தொழுகை செய்யும் காட்சியும், பயணிகள் நிலைமை தெரியாமல் வீடியோ எடுக்கும் காட்சியும் தெளிவாக காணப்படுகிறது.
Karnataka: Bus driver Shafiulla Nadaf stopped a govt bus mid-route from Hubballi to Haveri to offer Namaz roadside, with passengers inside.
— Angry Saffron (@AngrySaffron) April 30, 2025
If this were any other religion, they’d likely be suspended or face an FIR by now. pic.twitter.com/4kdqjnmBKH
இச்சம்பவம் குறித்து சில பயணிகள் புகார் அளித்ததை தொடர்ந்து கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி, “அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் மதவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது. இது பொதுப் பணிக்கு எதிரான செயலாகும். பயணிகளுடன் கூடிய பேருந்தை நடுவழியில் நிறுத்தி தொழுகை செய்வது முறையல்ல” எனக் கண்டித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
