ஈரோடு இடைத்தேர்தலில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

 
ஜனநாயகக் கடமையாற்றிய சத்ய பிரதா சாகு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது புதிதாக விண்ணப்பித்த, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர்களாக தகுதியை கொண்ட 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்து சேரலாம். அந்த வகையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. இதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர் பெயர், முகவரி விவரம் அடங்கியிருக்கும்.

இந்நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

voter id

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கெனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. க்யூஆர் கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே அதில் இடம் பெற்றுள்ளன. இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

sathya pradha sahu

மேலும், ஏப்ரல் மாதம் புதிய பாதுகாப்பு அம்சங்களும் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது என்றும் இந்தாண்டும் புதிதாக  வாக்காளர் அட்டைக்கும்,  மாற்றங்களுக்காகவும் விண்ணப்பித்தவர்கள் என்று 16 லட்சம் பேர் உள்ளனர்.

பாதுகாப்பு அம்சத்துடன்  புதிய வாக்களர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாகவும், தற்போது அச்சிடுக்கும் பணிநடைபெற்று வருகிறது.  முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வழங்கப்படவுள்ளது” என கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web