இன்று புதுவையில் வாக்குப்பதிவு... 1099 வாக்குச்சாவடிகள் ட்ரோன்கள் மூலம் நேரடி கண்காணிப்பு!
இன்று காலை புதுச்சேரி, அசாம், கேரளா என 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 1,099 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய 110 கள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நவீன தொழில்நுட்பமான ட்ரோன்கள் மூலம் அனைத்துப் பகுதிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குத் தேவையான உபகரணங்களுடன் சரியான நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் அச்சமின்றி வந்து வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அங்குக் கூடுதல் பாதுகாப்பிற்காக மத்திய ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 48 மணி நேர அமைதி காலத்தில் தேர்தல் விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.
மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன மற்றும் தேர்தல் பரப்புரைகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களைக் கண்காணிக்கப் பறக்கும் படைகளும் தயார் நிலையில் உள்ளன.

புதுச்சேரியிலிருந்து வெகு தொலைவில் உள்ள மாஹே மற்றும் ஏனாம் போன்ற பிராந்தியங்களைக் கண்காணிக்கத் தொழில்நுட்பம் பெரும் துணையாக உள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து பெறப்படும் ட்ரோன் காட்சிகள் 4K தரத்தில் நேரடியாகக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் தேர்தல் களம் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
